×

அரசு பஸ்சில் ஜன்னல் கண்ணாடியில் சிக்கி நகை தொழிலாளிக்கு 2 விரல்கள் துண்டானது

பட்டுக்கோட்டை, மே 20: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். (43) இவர் பட்டுக்கோட்டையில் புது மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் நகை வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மதுக்கூரிலிருந்து ஒரு அரசு பேருந்தில் ஏறி பட்டுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். ராஜசேகர் கடைசி 6 பேர் அமர்ந்து செல்லும் சீட்டில் ஜன்னல் பக்கமாக அமர்ந்து கையை ஜன்னலில் வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பேருந்து படப்பைக்காடு அருகே சாலையிலிருந்த பள்ளத்தின்மீது சென்ற போது ஜன்னல் கண்ணாடியில் கை வைத்திருந்த ராஜசேகரின் கை விரல்களில் ஜன்னல் கண்ணாடி திடீரென இறங்கியது. இதில் ரத்தம் சொட்ட சொட்ட ராஜசேகரின் 2 விரல்களும் தூண்டானது. உடனே அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ராஜசேகரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரித்து வருகின்றனர். ராஜசேகர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் 2 விரல்களும் துண்டான ராஜசேகர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

The post அரசு பஸ்சில் ஜன்னல் கண்ணாடியில் சிக்கி நகை தொழிலாளிக்கு 2 விரல்கள் துண்டானது appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Rajasekhar ,Madhukur Indira Nagar ,Pattukottai, Tanjore district ,Manimekalai ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த வாலிபருக்கு கை முறிவு